மானங்கெட்ட மனுவாதி



பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை "எழுச்சி தினம்" என்று சொல்லி "தன்மான இந்துக்களுக்கு" வாழ்த்து தெரிவித்திருக்கிறார் எச் ராஜா. 
ஒரு பயங்கரவாதச் செயலை கொண்டாடுகிறவர் தன்மான இந்துவாக இருக்கமாட்டார், மானங்கெட்ட மனுவாதியாகவே இருப்பார் என்பதை இந்து வெகுமக்கள் அறிவார்கள். முஸ்லிம் சகோதரர்களுக்கு சங் பரிவாரம் இழைத்த கொடுமையை தமக்கு இழைக்கப்பட்டதாகவே கருதி அவர்கள் வேதனைத் தீயில் வாடியிருக்கிறார்கள். இந்தக் கொடுமையைச் செய்த பாஜக உள்ளிட்ட சங் பரிவாரத்தின் மீதும், அவர்களது பினாமிகள் மீதும் கடுஞ்சினத்தில் இருக்கிறார்கள். ஆர்கே நகரில் பாடம் கற்பிப்பார்கள்.

Comments