அருணன் தன்வரலாறு என்றதும் ஏதோ சுயபுராணமல்ல.
அவர் சிபிஎம் கட்சிக்கு வந்தது-. அவர் ஒரு எழுத்தாளராய் பரிணமித்தது..--எந்தெந்த நுால்களை எப்படி எழுதினேன் என்பதை ஒரு அருமையான அனுபவப்பகிர்வாக எழுதியுள்ளார்.
அவரது ஆழ்ந்த நூல் பயிற்சியும் களஆய்வுகளும் சிறந்த படைப்புகளாக உருமாறியகதைகளை ருசிகரமாய் சொல்லிச் செல்கிறார்.
அதிலும் 3000 பக்கங்களைக்கொண்ட காலந்தோறும் பிராமணீயம் நூலுக்கான தரவுகளைத் தேடியது பிரம்மாண்டப் பணியாக விபரங்களோடு விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான ஆதாரங்களைத்தேட பல நூல்களை ஆய்வு செய்துள்ளார். அதில் ருசிகரமான தகவல்களையும் அள்ளித் தெளித்துச் செல்கிறார். உதாரணமாக நந்தன் பிறந்த இடத்தை சென்று ஆய்வுசெய்கிறார்.
அந்த இடம் மீநந்தன் காலனி என்றுபெயர். நந்தன் வாழ்விடத்தை 1200 ஆண்டுகளுக்கு முன்பு சேக்கிழார்-- பற்றிய பைங்கொடிச் சுரைமேற்படர்ந்த பழங்கூரையுடைப் புல்குரம்பைச் சிற்றில் என்று பாடியுள்ளார்.
அது இன்றும் ஆயிரமாண்டுகளுக்குப்பின்னும் அதே புலைப்பாடியாகவே உள்ளது--நந்தன் பரம்பரையின் வாழ்நிலை மாறவேயில்லை--என்று அருணன் வருந்தி எழுதுகிறார்.
சிதம்பரம் கோவிலில் தில்லை பிராமணர்களின் அட்டூழியம் பற்றி--நந்தனின் சன்னதியை ஒழிக்க தெற்குவாசலையே சுவர் எழுப்பி அடைத்ததை கூறுகிறார். சுவாரசியமான நூல்-- ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.மறக்காமல் துணைநின்ற என்போன்ற தோழர்களையும் குறிப்பிட்டுள்ளார்.
எழுத நினைப்பவர்கள் வாசிக்க வேண்டிய நூல்இது.
300 பக்கம்-- 200 ரூ--வசந்தம் வெளியீட்டகம்
94422 61555 --மதுரை
Comments
Post a Comment